Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - October 30 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/santhavasantham/message/12764

தலையால் வணங்கிஎன் தாளாலுன் கோவில்
வலம்வந்து வாயால் துதித்து - நலம்வேண்டிக்
கைகள் குவித்தென் செவியாலுன் சீர்கேட்டு
மெய்தான் விதிர்விதிர்க்கக் கண்ணில்நீர் - பெய்திங்ஙன்
உள்ளம் உருகி உனதருளாம் தேனமுதை
அள்ளிப் பருகி அனுபவித்துத் - துள்ள
உடலின் துணையை உணர்ந்தேன் எனவே
விடமாட்டேன் இவ்வுடலை விண்ணில் - இடம்பெறினும்
வேண்டேன் விடையேறும் பெம்மானே! நற்பிறவி
மீண்டும் பலபெற வைத்திடுவாய் - யாண்டும்என்
தேகத்தின் செய்கைகளால் சித்தம் தெளிவாக்கும்
யோகம் புரிதற்(கு) உதவு.

No comments: