Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - November 13 2005

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/37913

வையக வாழ்வின் வகையெலாம் அறியா
... வயதிலென் மனத்தினுட் புகுந்துன்
கைதனை அசைத்துக் கனிவுடன் நோக்கிக்
... காட்டினாய் கருணையின் திறத்தை
மெய்யெலாம் சிலிர்க்க வைத்தபின் என்னை
... விட்டுநீ விலகிலாய் வேந்தே!
ஐய!நீ என்னைச் சிக்கெனப் பிடித்தாய்
... யாதுநான் செய்குவன் இனியே!

No comments: