திருச்சிற்றம்பலம்
இன்று பிரதோஷ நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
<> சீரை நிலைநாட்டுவாய் <>
போகத்தை நுகர்தல்யான் ஒழிக்க வொட்டேன்
.. புன்மையாம் செயல்களைப் புரிவேன் நித்தம்
ஆகத்தைப் பேணுவேன் அறிவைத் தேடேன்
.. ஆயினும் உன்புகழ் கேட்ட பின்னர்
போகத்தான் யான்விடேன் உன்றன் தாளை;
.. புல்லரைக் காத்தருள் புரிவோய்! பெண்ணைப்
பாகத்தில் வைத்துள பரமா! என்னைப்
.. பாலித்துன் சீர்நிலை நாட்டு வாயே.
அனந்த் 26/27-3-2025