இன்று சனிப்பிரதோஷச் சிறப்பு நன்னாள்.
திருச்சிற்றம்பலம்
பொய்யுலகைத் தோற்றுவிக்கும் பொல்லாத மாயையினால்
வையமிதில் பிறந்திருந்து வாழுமிந்தப் புன்மையனைத்
தையலிடம் வைத்தபிரான் தன்னடியார் தமைக்காட்டி
உய்யும்வகை உணர்த்தியதை உரைத்திடவோர் மொழியின்றே.*
(*அன்பொடுஉன் நாமம்கேள் அன்பர்தம் அன்பருக்(கு) அன்பனாயிட அருள் அருணாசலா-ஸ்ரீரமண மஹர்ஷி)
. .... அனந்த் 23/24-5-2025