Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - April 03 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

பிழை பொறுக்கும் பெம்மான்

எச்சில் மலிந்த என்வாயால்
..எளியேன் இயம்பும் புன்சொல்லைத்
துச்ச மென்றே இகழாமல்
.. சொல்லுக் கடங்காச் சிவபெருமான்
மெச்சி ஏற்றான் அதைநினைந்து
..மேனி விதிர்க்க அழு(து)என்றன்
அச்சம் தீர்ந்தேன் செய்பிழைகள்
.. அனைத்தும் பொறுப்பான் அவனென்றே.

============================================


பிழை பொறுக்கும் பெம்மான்-2

அன்புள்ளம் கொண்ட அடையவர்கள் செய்பிழையை
நன்கு பொறுக்கி நடராசன் - பின்பதனை
நெற்றிக்கண் ணாலெரிப்பான் மீண்டுமது நேராத
பெற்றியவர் எய்தும் பொருட்டு.


குறிப்பு:

இன்று காலை தம் மனைவியாருடன் இங்கு (சிங்கை) வந்த இலந்தையார் முன்பிட்ட பிரதோஷப் பாடல் தலைப்பைப் பார்த்ததும் 'சிவன் நம் பிழைகளைப் பொறுக்குவான்' என்ற பொருளும் அதிலிருப்பதைச் சுட்டினார்.

மேலுள்ளது அதன் விளைவாக எழுந்த பாடல்.

No comments: