உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அதிசயம்
பாரடியோ! தீயேந்திப் பரமொன்று நிற்கிறது
நீரோடும் அதன்சடையில் நிலவொன்றும் காண்கிறது
சீராடும் மேனியிலே பெண்ணுருவும் தெரிகிறது
யார்பாட வல்லார்இவ் வதிசயத்தை யானறியேன்!
கையில் அழல்மேனி காணு(ம்)நிறம் அழல்பேணும்
மெய்யில் புலியாடை மெய்யடியர் புலி;மேலும்
செய்ய சடைதாங்கு தையல்இடம் ஒருதையல்
ஐய! இதுபோல அதிசயந்தான் யாங்குண்டு?
அழலொரு உருவம் பூண்டு அரவுடன் அருகு தும்பை
அழகுற அணிந்து கையில் அடிக்கவோர் உடுக்கை ஏந்தி
பழகிய நடன மாடிப் பார்ப்பவர் உளம்நெ கிழ்ந்து
அழமிக மகிழ்ந்து முத்தி அருளுமோர் அதிச யம்காண்!
அதிசயம்
பாரடியோ! தீயேந்திப் பரமொன்று நிற்கிறது
நீரோடும் அதன்சடையில் நிலவொன்றும் காண்கிறது
சீராடும் மேனியிலே பெண்ணுருவும் தெரிகிறது
யார்பாட வல்லார்இவ் வதிசயத்தை யானறியேன்!
கையில் அழல்மேனி காணு(ம்)நிறம் அழல்பேணும்
மெய்யில் புலியாடை மெய்யடியர் புலி;மேலும்
செய்ய சடைதாங்கு தையல்இடம் ஒருதையல்
ஐய! இதுபோல அதிசயந்தான் யாங்குண்டு?
அழலொரு உருவம் பூண்டு அரவுடன் அருகு தும்பை
அழகுற அணிந்து கையில் அடிக்கவோர் உடுக்கை ஏந்தி
பழகிய நடன மாடிப் பார்ப்பவர் உளம்நெ கிழ்ந்து
அழமிக மகிழ்ந்து முத்தி அருளுமோர் அதிச யம்காண்!
No comments:
Post a Comment