உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அருள் செயலாகாதா?
அத்தன் நீயே அனைத்துமென
..அறிந்து வணங்கி வலம்வந்த
அத்தி முகனுக் கன்றொருநாள்
..அளித்தாய் அரிய கனியொன்றை
நித்தம் நின்னை நெஞ்சகத்துள்
..நெடுக வணங்கி வலம்வரும்இப்
பத்தன் தனக்குப் பழமொன்றைப்
..பரிவாய் அளிப்ப தெந்நாளோ?
முத்தர் சித்தர் முனிவரெல்லாம்
.. முயன்றும் கிட்டா முழுமுதலைப்
பித்தன் இங்கே பெறநினைக்கும்
.. பேதைத் தனத்தை இகழாமல்
அத்தி சிலந்தி அரவினுக்கும்*
.. அன்று செய்த திருவருளில்
பத்து நூறில் ஒருகூற்றைப்
.. பகிர்ந்த ளிக்க லாகாதா?
(*திருக்காளத்தி)
அருள் செயலாகாதா?
அத்தன் நீயே அனைத்துமென
..அறிந்து வணங்கி வலம்வந்த
அத்தி முகனுக் கன்றொருநாள்
..அளித்தாய் அரிய கனியொன்றை
நித்தம் நின்னை நெஞ்சகத்துள்
..நெடுக வணங்கி வலம்வரும்இப்
பத்தன் தனக்குப் பழமொன்றைப்
..பரிவாய் அளிப்ப தெந்நாளோ?
முத்தர் சித்தர் முனிவரெல்லாம்
.. முயன்றும் கிட்டா முழுமுதலைப்
பித்தன் இங்கே பெறநினைக்கும்
.. பேதைத் தனத்தை இகழாமல்
அத்தி சிலந்தி அரவினுக்கும்*
.. அன்று செய்த திருவருளில்
பத்து நூறில் ஒருகூற்றைப்
.. பகிர்ந்த ளிக்க லாகாதா?
(*திருக்காளத்தி)
No comments:
Post a Comment