Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - February 18 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அம்பலவாணன்

தெம்புடன் தில்லைமா நகரிலே சீர்வளர் மதுரையில் நெல்லை நகரில்
உம்பர்வாழ் மலையென ஒளிருகுற் றாலமாம் உயர்தலம் தன்னில் அன்று
நம்மனை* என்றுநீ நவின்றவள் நண்ணிய ஆலமாம் காட்டில் இந்த
அம்பலம் ஐந்திலும் ஐயநீ ஆடிடும் அழகினைக் காண வைத்தாய்!

*நம்மனை = நம் அன்னை என்று காரைக்கால் அம்மையை அழைத்தது
தில்லை - பொன்னம்பலம்
மதுரை- வெள்ளியம்பலம்
திருநெல்வேலி- தாமிர சபை
திருவாலங்காடு - இரத்தின சபை
குற்றாலம்- சித்திர சபை

No comments: