Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - April 17 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

திட்டம் வகுப்பாய்

நானும் கடைத்தேறி நல்லபடி போய்ச்சேர்ந்து
.. நாதன் உன்னடியின் நீழலிலே நித்தியமாய்
மோனச் சிவமாகி முடிவில்லா ஒன்றாகி
.. முழுமை பெற்றிடுவேன் மீண்டுமுல கிற்பிறவேன்
ஏனோ கனவிதுபோல் இவ்வெளியேன் கண்டிடுவேன்
.. எள்ளி நகையாமல் என்னரசே நீஉன்றன்
தேனார் அருள்சொரிந்து தேடலிதை நிறைவாக்கத்
.. திட்டம் வகுத்திடுவாய் தீருமுன் கடனுமங்கே.

No comments: