Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - May 03 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தீப்புக்கென் தேகஞ் சிதைந்திடும் போதென்றன் சிந்தையிலே
நீப்புக்கென் ஆவியை நின்னடிக் கீழே நிறுத்திஉன்றன்
காப்புக்குள் வையெனக் கைதொழ லாகாக் கடைநிலையில்
நாப்புக்கு மோஉன்றன் நாமமென் றஞ்சி நடுங்குவனே!

ஆதலால்..

அத்தனே கேள்இங்(கு) அமைசர்வ தாரியாம் ஆண்டினிலே
சித்திரைத் திங்கள் திரயோ தசியுடன் சேர்ந்துநல்ல
உத்திரட் டாதியும் உள்ளஇந் நாளில் உனைஅழைத்தேன்
இத்தைக் குறித்தெனைக் காப்பாய் இறந்துநான் ஏகையிலே.

No comments: