Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - April 25 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

ஒள்ளெரி நெருப்பும் தண்ணொளி மதியமும்
பிள்வாய் அரவும் துள்ளிடு மானும்
வீசிடு கைகளும் ஆசிசெய் கரமும்
தேசுறு மேனியில் பூசிடும் நீறும்
அலையுடை மாதொடு மலைதரு மங்கையும்
நிலைதாள் ஒன்றும் நீள்தாள் ஒன்றும்
உடையதோர் இறைவன் நடமிடும்
கடையனின் உளமெனும் காட்டிலும் ஆமே.

No comments: