உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
http://groups.yahoo.com/group/santhavasantham/message/15854
புகழ்சேர் நலங்கள் பலவும் பொருந்திய பூரணன்நீ
இகழ்தற் குரியன எல்லாம் இருந்திடும் ஈனனாம்யான்
நிகழ்த்திடும் புன்மைச் செயல்களை நீயோர் பொருட்டெனஉன்
அகத்தினில் கொண்டிடில் யாரிடம் கூறி அரற்றுவனே?
இப்போது இங்குப் பிரதோஷ வேளை. 4,5 ஆண்டுகளுக்கு முன் மன்றமையத்தில் இட்ட ஒரு பாடல் கண்ணில் பட்டது. அதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில்:
வகையாய் உடுத்தனன் வற்கலை யாயொரு வெங்கரித்தோல்
நகையாய் அணிந்தனன் நாகங்கள் நாலெட்டும் பாருமென்று
நகையாய் நவிலுமின் னானில மென்று நடுங்கியரன்
சிகைமேல் அணிந்தனன் சிங்கார மாயந்தச் சந்திரனே!
(நகை = அணிகலம்/ இகழ்ச்சி)
http://groups.yahoo.com/group/santhavasantham/message/15854
புகழ்சேர் நலங்கள் பலவும் பொருந்திய பூரணன்நீ
இகழ்தற் குரியன எல்லாம் இருந்திடும் ஈனனாம்யான்
நிகழ்த்திடும் புன்மைச் செயல்களை நீயோர் பொருட்டெனஉன்
அகத்தினில் கொண்டிடில் யாரிடம் கூறி அரற்றுவனே?
இப்போது இங்குப் பிரதோஷ வேளை. 4,5 ஆண்டுகளுக்கு முன் மன்றமையத்தில் இட்ட ஒரு பாடல் கண்ணில் பட்டது. அதைப் பகிர்ந்து கொள்ளும் எண்ணத்தில்:
வகையாய் உடுத்தனன் வற்கலை யாயொரு வெங்கரித்தோல்
நகையாய் அணிந்தனன் நாகங்கள் நாலெட்டும் பாருமென்று
நகையாய் நவிலுமின் னானில மென்று நடுங்கியரன்
சிகைமேல் அணிந்தனன் சிங்கார மாயந்தச் சந்திரனே!
(நகை = அணிகலம்/ இகழ்ச்சி)
No comments:
Post a Comment