உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
பூங்கொன்றை சடையார்த்துப் புலியதள்மேல் போர்த்துப்
.. பொன்னாகந் தனில்நாகம் பூண்டுமழு மானும்
ஓங்குதிரி சூலமுடன் உடுக்கையும்கை ஏந்தி
.. ஒருபாகம் உமைசார ஒழுகுபுனல் கங்கை
தாங்குமிறை தில்லையிலே தாதையென ஆடும்
.. தாண்டவத்தை என்னுள்ளே தரிசிக்க வேண்டி
ஏங்குமென துள்ளநிலை எடுத்துரைக்கப் போமோ?
.. எனையாளும் ஈசனவன் என்(று)இரங்கு வானோ?
-----------------------------------
பத்தனாய் நடித்தேன் மிக்கப் பாங்குடன்; கூலி யாய்மெய்ப்
பத்தனாய் மாற்றி என்னைப் பரமனே உன்னை நித்தம்
அத்தனே என்று கூறி அகங்குழைந் துருகச் செய்வாய்
இத்தனை மட்டும் கேட்டேன் இதற்குமேல் ஒன்றும் வேண்டேன்!
பூங்கொன்றை சடையார்த்துப் புலியதள்மேல் போர்த்துப்
.. பொன்னாகந் தனில்நாகம் பூண்டுமழு மானும்
ஓங்குதிரி சூலமுடன் உடுக்கையும்கை ஏந்தி
.. ஒருபாகம் உமைசார ஒழுகுபுனல் கங்கை
தாங்குமிறை தில்லையிலே தாதையென ஆடும்
.. தாண்டவத்தை என்னுள்ளே தரிசிக்க வேண்டி
ஏங்குமென துள்ளநிலை எடுத்துரைக்கப் போமோ?
.. எனையாளும் ஈசனவன் என்(று)இரங்கு வானோ?
-----------------------------------
பத்தனாய் நடித்தேன் மிக்கப் பாங்குடன்; கூலி யாய்மெய்ப்
பத்தனாய் மாற்றி என்னைப் பரமனே உன்னை நித்தம்
அத்தனே என்று கூறி அகங்குழைந் துருகச் செய்வாய்
இத்தனை மட்டும் கேட்டேன் இதற்குமேல் ஒன்றும் வேண்டேன்!
No comments:
Post a Comment