Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - August 14 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

சிக்கெனப் பிடித்தாய்! (4)

அணியவோர் அரவும் அம்பலந் தனில்உன்
..ஆட்டமும் பாட்டமும் கண்டு
பணியவோர் அரவும் கொண்டனை அந்தப்
.. பாங்கினில் மயங்குவேன் என்னும்
துணிவுடன் என்னுள் தோன்றியே என்னைத்
.. தொண்டனாய் நின்மலர் அடிக்கீழ்ப்
பிணித்திட எண்ணிச் சிக்கெனப் பிடித்தாய்
.. பேதைஎன் செய்குவன் இனியே


பணியவோர் அரவு என்பது சிவ நடனம் கண்டு மகிழும் பதஞ்சலி முனிவரைக் குறிக்கும்.

No comments: