Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - July 30 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

செஞ்சடையோன்

வாடிப் புகுந்தது வான்மதி மீண்டும் வளமடைய
ஓடிப் புகுந்த(து) ஒருநதி ஆங்கே உலவிவர
ஆடிப் புகுந்த(து) அரவும் சடையாம் அடவியதைச்
சூடிப் பொலிபவன் சிந்தையுள் புக்கின் துயரிலையே

1 comment:

ananth said...

{ வட அமெரிக்க நேரத்திற்குச் சரிசெய்த பஞ்சாங்கப்படி இன்று பல கோயில்களில் பிரதோஷம்.)

ஆர்கலி தீர்ப்பார் எனப்பலர் கடையை
.. அடைந்தொரு பயனுமில் லையே
சீர்கழல் இணையைச் சிந்தையில் வைத்துத்
.. தினம்தொழ எனக்(கு)அருள் புரிவாய்
தேர்கடா வுதற்குக் கயிலையைப் பெயர்க்கச்
.. சென்றவன் விறல்அழித்(து) அருளும்
ஏகநா யகனே தில்லையில் ஆடும்
.. இறைவனே எம்பெரு மானே.

அன்புடன்,
வி. சுப்பிரமணியன்