Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - July 15 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

தத்துவம் புகலீரோ?

தட்பஞ் செறிந்த மலையுறைவீர்
.. சட்டென் றதைவிட்(டு) ஆலடியில்*
நுட்பம் எதையோ நுவன்றிடுவீர்
.. நொடியில் அதுவிட்(டு) ஊரூராய்
வெட்கம் விடுத்தே இரந்திடுவீர்
.. வெளியில் நடமும் ஆடிடுவீர்
உட்க ருத்(து)இச் செய்கைகளுக்(கு)
.. உளதேல் எனக்கும் உரையீரோ?

*ஆலமரத்தின் கீழ்

No comments: