Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - August 28 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


http://mail.google.com/mail/#search/pradhosham/1187d26d2630be68


சிக்கெனப் பிடித்தாய் (5)

தக்கனைக் கடிந்தோய்! தளர்விலா துன்பேர்
.. சாற்றிடும் அடியவர் முன்னே
தக்கதோர் தகுதி யாதுமில் லாமல்
.. தருக்குடன் உலவுமென் அன்பு
பொக்கெனக் கண்டும் பொருட்படுத் தாது
.. புன்மையேன் என்மலம் நீக்கச்
சிக்கெனப் பிடித்தென் சிந்தையுள் நின்றாய்
.. செய்வன்யான் நின்பணி ஒன்றே.


பொக்கு = உள்ளீடு முற்றாத தானியம்; பதர்

No comments: