Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - September 12 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா


உதைபந்து போல உலகிலடி பட்டு
வதையுற்று வாடிய வேளை - சிதைமலிந்த
காடதனில் ஆடும் கழல்காட்டிச் சுட்டினாய்
வீடடைய வைக்கும் வழி.


மேலும், மதுரையில் இன்றோடு நிறைவுறும் சிவபெருமானின் திருவிளையாடல் விழாவை ஒட்டிய ஒரு பாடல்:


சிக்கெனப் பிடித்தேன் (6)


செட்டியாய் வந்து தெருவிலுள் ளோர்க்குத்
.. தெரிசனம் காட்டிய தறிவேன்
புட்டினைச் சுமந்து புவியுளோர் உன்சீர்
.. புரிந்திட வைத்ததும் அறிவேன்
மட்டியாய்த் திரியும் என்னுளும் உன்றன்
  .. மாண்பினைக் காட்டிவந் தாண்டு
கெட்டியாய் என்னைச் சிக்கெனப் பிடித்தாய்
.. கேட்டிட யாதினி உளதே
 

1 comment:

ananth said...

{ Appending Ilandhai's posting from the other pradhOsham thread:

எவனோ பிடித்தான் எனநான் நினைத்தேன்
அவனோ பிடித்தான் அகம்?

இலந்தை }