Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - January 20 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

விந்தை

சிந்தையில் கவலைக் கன்றிச் சிறிதுமிவ் வுலகை ஈன்ற
எந்தைநீ இருப்ப தற்கோர் இடம்தரா நாயேன் முன்னால்
வந்தெழில் நடன மாடி வாழையில் ஊசி போலச்
சுந்தரா!  நீபு குந்தாய் சொல்லொணா விந்தை ஈதே!

No comments: