Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - January 27 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

http://groups.yahoo.com/group/agathiyar/message/36732

தன்ஊண் இரக்கும்அரன் தேகம் தகதகெனப்
பொன்னாகக் காணல் புதுமையன்று - என்னென்றால்
தங்கக் கொடியாளைத் தன்னுடலில் சேர்த்தவர்க்கு
அங்கமெலாம் ஆகாதோ பொன்?

காண்பதில் ஒரு அதிசயமுமில்லை (சுந்தர மூர்த்தி நாயனாரும் பிறரும் பொன்னார் மேனியன் என்று அரனைப் பாடுவார்கள்). ஏனெனில், அவன் தன் உடலோடு (இடது பக்கத்தில்) தங்கக்கொடி போன்ற உமையவளைச் சேர்த்துக் கொண்டுள்ளான் அல்லவா? அதனால் தான்!

No comments: