உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
வாவென்றாய் யானுமுன் வாயிலின்முன்
.. வந்து நின்றேன் வாயெடுத்துப்
பாவொன்றைப் பாடிட ஆணையிட்டாய்
.. படித்த பலவுள் ஒன்றிசைத்தேன்
யாவும்நான் என்பதை அறிந்திடென்றாய்
.. அதையும் உணர முயன்றுவந்தேன்
காவென்று நானுனைக் கேட்கையில்நீ
.. காக்கத் தயக்கம் காட்டுவதேன்?
வாவென்றாய் யானுமுன் வாயிலின்முன்
.. வந்து நின்றேன் வாயெடுத்துப்
பாவொன்றைப் பாடிட ஆணையிட்டாய்
.. படித்த பலவுள் ஒன்றிசைத்தேன்
யாவும்நான் என்பதை அறிந்திடென்றாய்
.. அதையும் உணர முயன்றுவந்தேன்
காவென்று நானுனைக் கேட்கையில்நீ
.. காக்கத் தயக்கம் காட்டுவதேன்?
No comments:
Post a Comment