Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - June 16 2008

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா



சிக்கெனப் பிடித்தாய்! (2)

இடமமர்ந் துன்னைப் பணிகுவோர்க் கெல்லாம்
.. இரங்கிநல் லருள்செயப் பணிக்கும்
தடங்கணா ளோடு தலையிலோர் மாதைத்
.. தாங்கியோய்! நின்னுருக் காணில்
தடமிலாச் செருக்கில் துள்ளுமென் உள்ளம்
.. தந்தைதாய் நீயெனக்(கு) என்றே
மடக்கிநீ என்னைச் சிக்கெனப் பிடித்தாய்
.. மற்றுநான் செய்வதொன் றினியே!

இவ்வரிசையில் முந்தைய பாடல் 1 காண:

http://groups.yahoo.com/group/santhavasantham/message/12934
 

No comments: