Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - March 12 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

அண்டம் நிறைந்தோய்! அம்பலத்தில்
.. ஆடும் ஐய!அம்ப எனதுபுன்மைப்
பிண்ட மதிலும் நீபுகுந்து
.. பிணித்த பாச மாசகற்றித்
தண்டை ஒலியை நான்கேட்கத்
.. தந்தாய் அருளை அதன்விளைவாய்
உண்ணும் போதும் உறங்கையிலும்
.. உன்னை என்னுள் உணர்வேனே.

No comments: