Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - March 27 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

உன்னைநான் துதிக்க எண்ணி
.. ஓரிடம் அமருங் காலை
என்னுள்ளே இருந்து கொண்டே
.. என்செயல் கெடுத்து முற்றாய்க்
கொன்றிடா(து) என்னைக் கொல்லும்
.. கொடியதோர் அகந்தை மாய
உன்னையே நானென்(று) உள்ளே
.. உணர்தலே வழியாய்க் கண்டேன்!

No comments: