Monday, November 19, 2012

பிரதோஷப் பாடல் - November 22 2007

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

வாய் திறவாய்

மனமாம் மாயச் சுழலிடையே
.. மாயா வகையில் நானுன்றன்
நினைவாம் படகைச் செலுத்துதற்கு
.. நேரும் துயரம் தாளாமல்
தினமும் வருந்தும் அவலத்தைத்
.. தீர்க்க வழியை மொழியாயோ
முனைநாள் முதலாய்த் தருநிழலில்
.. மௌனம் பயிலும் என்இறையே!

No comments: