Saturday, November 17, 2012

பிரதோஷப் பாடல் - September 05 2006

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா

கற்பூர வெண்மதியம் காவிச்செங் கொன்றைமலர்
... கவின்பவளத் திருமேனியில்
பொற்பூறும் கருங்கண்டம் பொன்மஞ்சள் அரளித்தார்
.. பொலிவாக ஓர்பாதியில்
நற்பாசி வண்ணத்து நாயகியும் கொண்டிலங்கு
.. நடராசத் தெய்வமணியே!
சிற்றோலக் கந்தன்னில் சேவிப்போர் காண்வண்ணம்
.. தேர்ந்தேன்என் மனக்கண்ணிலே.

No comments: