உ சிவமயம் திருச்சிற்றம்பலம் முருகா
அதிசயம்
பழுதே இல்லாப் பூசை யாவும்
.. பண்ணிப் பார்த்தேன் பயனில்லை
தொழுதேன் பலவாய்த் துதிகள் கொண்டு
. தொடர்ந்து பலநாள் பயனில்லை
மழுவார் ஈசா இரங்காய் எனக்கண்
.. மழையாய்ப் பொழிய, மனமிழந்தே
அழுதேன் அன்றே அடைந்தேன் உன்னை
.. ஐயா! இதுவோர் அதிசயமே!
அதிசயம்
பழுதே இல்லாப் பூசை யாவும்
.. பண்ணிப் பார்த்தேன் பயனில்லை
தொழுதேன் பலவாய்த் துதிகள் கொண்டு
. தொடர்ந்து பலநாள் பயனில்லை
மழுவார் ஈசா இரங்காய் எனக்கண்
.. மழையாய்ப் பொழிய, மனமிழந்தே
அழுதேன் அன்றே அடைந்தேன் உன்னை
.. ஐயா! இதுவோர் அதிசயமே!
No comments:
Post a Comment